“பசுமையான அலுவலக சூழல்” பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியால், எதிர்காலத்தில் ஓரளவிற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பயிர் செய்கை ஊக்குவிப்பு திட்டங்களுடன் இணைந்து , விவசாய திணைக்கள தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் விவசாயப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த .டி. சில்வா அவர்களின் அனுசரணையில் “பசுமையான அலுவலக சூழல்” எனும் தொனிப் பொருளில் பயிர்ச் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

டிப்ளமோ விருது வழங்கும் விழா விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கற் பயிற்சி மையத்தின் கீழ் நடைபெற்று வரும். விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கைநெறியின் (NVQ 05) சான்றிதழ் வழங்கும் விழா அநுராதபுரம், பிபிலை, லபுதுவை, பாலமுனை பரந்தன் மற்றும் வாரியபொல ஆகிய இலங்கை விவசாயக் கல்லூரிகளிலும் விவசாய உற்பத்தி தொழிநுட்பம்தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியின் (NVQ 06) சான்றிதழ் வழங்கும் விழா அகுணகுலபெலச, கரபின்சா, குண்டசாலை,பெல்வெகரா, லபுதுவை மற்றும் வவுனியா ஆகிய இலங்கை … Continue reading டிப்ளமோ விருது வழங்கும் விழா

புதிதாக பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கு நிலங்களுக்கான கள நாள் கண்காணிப்பு மற்றும் பயிர் அறுவடை ஆய்வு -தம்புள்ளை 2022-03-08 சௌபாக்கியா விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் 2021-2023 இற்கு ஏற்ப உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக பயிரிடப்பட்ட நிலங்களுக்கு கள நாள் கண்காணிப்பு மற்றும் பயிர் அறுவடை ஆய்வு ஒன்று தம்புள்ளை வலய விவசாய போதனாசிரியர் பிரிவில் 08.03.2022 அன்று மேலதிக பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.ஜயந்த இளங்கோன் தலைமையின்கீழ் மற்றும் மாகாண பணிப்பாளர் (மத்திய மாகாணம்) … Continue reading புதிதாக பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கு நிலங்களுக்கான கள நாள் கண்காணிப்பு மற்றும் பயிர் அறுவடை ஆய்வு -தம்புள்ளை 2022-03-08

பணிகளின் தொடக்கம் – 2022 2022ம் ஆண்டுக்கான பணிகளின் தொடக்கம் 03.01.2022 அன்று விவசாய திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வாவின் தலைமையில் மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதே நேரம் விவசாய திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டன.

ASDA ற்கான புதிய இணையத்தளம் மற்றும் மொபைல் அப் – 2021 ASDA வின் வலைதளமானது (asda.doa.gov.lk) எனும் இணையதளமாக அதிகார பூர்வமாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அவர்களால் 2021 ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி நடைபெற்ற விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த மாநாட்டு நிகழ்வில் தொடங்கிவைக்கப்பட்டது. புதிய தொழிநுட்பங்களை கொண்ட மொபைல் அப்ளிகேசன் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.