தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட விவசாய திணைக்களத்தின் விதை விற்பனைக்கூடம் மற்றும் விவசாய தகவல் மையம் 18.07.2024ம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. இது விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளரின் தலைமையில், திணைக்களத்தின் விவசாய வர்த்தக மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஆலோசனையுடனும் JICA திட்டத்தின் பங்களிப்புடனும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் விவசாயிகள் மற்றும் அப் பிரதேச மக்களுக்கு தேவையான தரமான விதைகளை தடையின்றி பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பயிர்ச்செய்கைக்கான தொழில்நுட்ப தகவல், விவசாய உள்ளீடுகள் மற்றும் இயந்திரங்கள் பற்றிய தகவல்களையும் விவசாய  தொழில்முனைவோர் பற்றிய தகவல்களையும்  இந்த மையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.