Tamil: HORDI Crop – Kekiri

HORDI - LOGO

கெக்கரி

Cucumis melo

இது ஒரு போசணை மிக்க பயிர். இது நீரிழிவு, குடல் அலற்சி மற்றும் சிறுநீரககல் போன்ற நோய்களை  குணப்படுத்தும்

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

விவசாய திணைக்களத்தால் எவ்வித வர்க்கங்களும் பரிந்துரைக்கப்பட வில்லை. பல சுதேச வர்க்கங்கள் விவசாயிகளிடையே பிரபல்யமடைந்துள்ளன.

காலநிலை தேவை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

இது வெப்ப காலநிலைக்கு சிறந்தது. இப்பயிர் 300 – 350C வரையான வெப்பநிலையில் வெற்றிகரமாக வளரும். கடல் மட்டத்தில் இருந்து 1000 மீற்றர் வரை வளர்க்கலாம். வருடம்  முழுவதும் செய்கை பண்ணலாம்.

மண்

பரந்த வீச்சிலான மண் வகைகளில் வளர்வதுடன் அதிக சேதன பொருட்கள் கொண்ட நல்ல நீர் வடிப்புள்ள மண் சிறந்தது. மண்ணின் பீ.எச். வீச்சானது 5.5-7.5 ஆகும்.

வித்து தேவை

ஒரு ஹெக்டேயர் நிலத்துக்கு 500 கிராம் வித்து போதுமானது ஒரு கிராம் விதையில் 90-100 வரையான வித்துக்கள் காணப்படும்.

நடுகை இடைவெளி

வரிகளுக்கு இடையே மற்றும் வரிகளுக்கு உள்ளேயான இடைவெளி 1.0 மீற்றர் ஆகும்.

நிலத்தை தயார் செய்தல் மற்றும் நடுகை செய்தல்

மண்ணை 20-30 செ.மீ ஆழம் வரை உழுது பெரிய மண் கட்டிகளை உடைக்கவும். நடுகை குழிகளை 30cm3 (நீளம், அகலம் மற்றும் ஆழம்) எனும் அளவில் தயார் செய்தல் மற்றும் அதிக அளவிலான உக்கிய சேதன பொருட்களை மேல் மண்ணுடன் கலந்த கலவையை குழிகளில் இட்டு நிரப்புதல் 10 செ.மீ உயரம் வரை நிரப்புதல். ஒரு குழியில் 3-4 வித்துகளை இடல். முளைந்து 2 வாரங்களில் நலிவான நாற்றுகளை அகற்றி இரு ஆரோக்கியமான நாற்றுகளை வளரவிடல்.

செய்கை காலம்

வருடம் முழுவதுமான செய்கை

பசளையிடல்

இட வேண்டிய நேரம்

யூரியா kg/ha

முச்சுபர் பொசுபேற்று kg/ha

மியூரைட் பொட்டசு kg/ha

அடிக்கட்டு பசளை

75

200

60

மேற்கட்டு பசளை (நாற்று முளைத்து 4 வாரங்களின் பின்)

75

60

மேற்கட்டு பசளை (நாற்று முளைத்து 8 வாரங்களின் பின்)

75

60

குறிப்பு – மண் பரிசோதனையின் பின் பொசுபரசு மற்றும் பொட்டாசியம் இடுவது சிறந்தது.

நீர் பாசனம்

வித்து முளைக்கும் வரை நாளாந்தம் நீர்பாசனம் செய்வது அவசியம். நீர் தேவை மற்றும் காலநிலையை பொருத்து ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு முறை நீர் வழங்கலாம். தேவையற்ற நீர் பாசனம் கொடி மற்றும் விதையை அழுகலடையச் செய்யும்.

களைக் கட்டுப்பாடு

பயிரின் ஆரம்ப காலத்தில் களைக் கட்டுப்பாடு செய்வது அவசியம். மூடுபடையிடலும் களை கட்டுப்பாட்டிற்கு  உதவும்

பீடை முகாமைத்துவம்

மெலோன் ஈ, அவுலக்கபோரா வண்டு, எபிலக்னா வண்டு, அழுக்கணவன், வெண் ஈ

பரிந்துரைக்கப்பட்ட பீடைநாசினிகளை தெளித்தல், களத் தூய்மையை பேணல்

நோய் முகாமைத்துவம்

நோய் காரணி: Erysiphe spp

அறிகுறிகள்

  • பழைய இலைகளின மீது மேற்பரப்பில் புள்ளிகள் உருவாகும்.
  • இதனால் இலைகள் மஞ்சள் மற்றும் வெள்ளையாகும்.
  • பழங்கள் பாதிப்படையாது.

முகாமைத்துவம்

  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி இடல், கள தூய்மையை பேணல்
  • நல்ல தரமான விதைகளை பயன்படுத்தல்
  • பங்கசு நாசினி தெளிப்பானைப் பயன்படுத்தல் (Mancozeh , captan)
  • களைக்கட்டுப்பாடு

நோயாக்கி: Pseudoperonospara cubensis

அறிகுறிகள்

  • கீழ் பூஞ்சன தொற்றின் ஆரம்பத்தில் இலைகள் மீது மஞ்சள் நிற ஒழங்கற்ற பற்றைகள் காணப்படும்
  • இந்த வெளிறிய நசிவுப்புண்கள் பின் கபிலநிறமாகும்
  • சாதகமான நிலையில், இலைகளின் கீழ்ப்புறத்தில் பங்கசு உருவாக்கத்தின் பஞ்சுபோன்ற வெந்நிற வளர்ச்சி தோன்றும் இலைகள் வெளிறி தோற்றமளிக்கும்

முகாமைத்துவம்

  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி இடல், களத்தூய்மை பேணல்
    • mencozeh 64% + Metaloxyl 8% WP
    • Captan 50% WP
    • Flutrifol 25% Ss
    • Patassium bicarbonate 82% SP
    • Azoxystrobin 250/ 1 SC

நோய் காரணி : phythium spp

அறிகுறிகள்

  • ஆரம்பத்தில் கபிலமாகும், நீர் நிறைந்த நசிவுப்புண்கள் விரைவாக பெரிதாகி நீர்மயமான மென்மையாகி அழுகும்
  • அழுகல் பொதுவாக மண்ணுடன் தொடர்புற்று இருக்கும் காய்களின் பகுதிகளில் ஆரம்பிக்கும்
  • ஈரலிப்பான காலநிலையில் அழகிய இழையங்களில் வெந்நிற பஞ்சு போன்ற பூஞ்சணவலை தோன்றும்

முகாமைத்துவம்

  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினியிடல் கள தூய்மை பேணல்
  • 10l நீரில் 14g Thiram 80% அல்லது 10l நீரில் 10g Thiphonate methy l 50% WP + thiram 30% WP னை கலந்து தெளித்தல்
  • 10l நீரில் 6 gram Topsin 70% WP

அறுவடை

காய் நன்கு முதிர்ச்சியடையும் போது, கூர்மையான கத்தி் கொண்டு காம்புடன் வெட்டி  அறுவடை செய்யவேண்டும்.

விளைச்சல்

ஹெக்டேயருக்கு 25,000 – 30,000 கிலோ கிராம்.