Tamil: HORDI Crop – Gotukola

HORDI - LOGO

வல்லாரை

Centella asiatica

பண்டைய காலம் முதல் வல்லாரை இலங்கையரிடம் மிகவும் பிரசித்தி பெற்ற இலை மரக்கறி ஆகும். காரணம் இதன் குணாதிசியமான தனித்துவ சுவை. இது மருத்துவ குணம் மற்றும் உயர் இரும்பு சத்தை கொண்டது. ஆகையால் உயர் சந்தை மதிப்புடையது.

காணப்படும் வகைகள்

வல்லாரையின் வளர்ச்சி தன்மையின் அடிப்படையில் இரு வகைப்படும்

  1. புதர் வகை
  2. கொடி வகை

வல்லாரையின் இலைகளின் அளவிற்கமைய கொடி வகையில் மூன்று வகைகள் உள்ளன.

  1. பெரிய இலைகள் உடைய வகை (பெரிய வல்லாரை)
  2. நடுத்தர அளவு இலை கொண்ட வகை (மீரிகம தெரிவு). இது அதிகமாக பொருளாதார ரீதியில் வளர்க்கப்படும் வகை மற்றும் நல்ல சுவையுடையது.
  3. சிறிய இலைகளுடனான வகை (கொடி வல்லாரை)

காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

தாழ் நாட்டு ஈரவலயம் செய்கைக்கு மிகப் பொருத்தமானது நீர்பாசன வசதி இருப்பின், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வளர்க்கலாம்.

மண்

செய்கைக்கு நன்கு நீர்வடிப்புள்ள தாழ் நிலம் பொருத்தமானது. பொருத்தமான மண் பி.எச். 6-7 வீச்சாகும்.

நடுகை பொருட்கள்

செய்கைக்கு பாதி முதிர்ந்த ஆரோக்கியமான ஓடிகள் உடனான வேர்கள் தெரிவு செய்யப்படும். நடுகை பொருளாக எடுப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன்  இலைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

100m2 க்கு தேவையான நடுகை பொருட்கள்

  1. பெரிய இலைகளுடனான வகை – 5000 – 7500 ஓடிகள்
  2. நடுத்தர அளவு இலையுடனான வகை 9000 – 10000 ஓடிகள்

நிலம் தயாரிப்பு

தெரிவு செய்யப்பட்ட நிலத்திற்கு அமைய உயர் பாத்தி அல்லது தாழ் பாத்தி அமைப்பதன் மூலம் வடிகாலை மேம்படுத்தலாம். ஆழமான வேருக்கு நல்ல இழையமைப்புடனான தூர்வையாக்கப்பட்ட மண் பொருத்தமானது.

நடுகை செய்தல்

குறித்த நடுகை இடைவெளிக்கமைய ஓடிகளை நடுகை செய்ய வேண்டும். நடுகை செய்ய முன் சேதன பசளையை மண்ணுடன் கலக்க வேண்டும். நடுகையின் போது மண் ஈரத்தன்மையுடன் காணப்பட வேண்டும். ஓலைகளால் மூடுவதன் மூலம் பாத்தி உலர்வதை தடுக்கலாம்.

நடுகை இடைவெளி

  1. பெரிய இலைகளுடனான வகை 20cm x 20cm
  2. நடுத்தர இலைகளுடனான கொடிவகை – 15 cm x 15 cm

பசளையிடல்

பயிருக்கு சேதன மற்றும் அசேதன என இருவகை பசளையும் இடலாம்.

1000m2 (1/4ac) க்கு தேவையான பசளை

  • சேதன பசளை – 1 தொன்

மாட்டெரு, கோழியெரு அல்லது கூட்டுப் பசளையை இடலாம். வணிக ரீதியான செய்கையாளர்கள் பொதுவாக கோழியெருவை பயன்படுத்துவர்

  • இரசாயன பசளை
இடவேண்டிய காலம்

யூரியா (kg)

முச்சுபர் பொசுபேற்று (kg)

மியூரைட் பொட்டாசு (kg)

அடிக்கட்டு பசளை (நடுகை செய்து இரு நாட்களுக்கு முன்)

9.0

13.5

10.0

மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4 வாரங்களின் பின்)

9.0

மேற்கட்டு பசளை (ஒவ்வொரு அறுவடையின் போதும்)

4.5

1.5

மேற்கட்டுபசளை (ஒவ்வொரு 6  மாதம்)

6.5

நீர் வழங்கள்

நீர்பாசனமானது மண் ஈரலிப்பை பேண அவசியமானது. நீர் தேங்குதலை தவிர்க்க வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

களைகட்டுபாட்டை மேற்கொள்வதால் அறுவடை தரத்தை பேணுவதோடு நோய் மற்றும் பீடை பரவலை குறைக்கலாம்

Pest Management

நோய் முகாமைத்துவம்

நோய் காரணி – இது Cercospora spp இனால் தோற்றுவிக்கப்படுகிறது

நோய் பரவல் – இந்த பங்கசானது மண், காற்று மற்றும் தொற்றுக்குள்ளான தாவர பாகங்களினால் பரவல் அடைகின்றது

நோய் அறிகுறிகள் – இலைகளில் சிவப்பு அல்லது ஊதா சார் கபில நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவும், பின்னர் இலை மஞ்சளாகி இறக்கும்

இலை புள்ளி நோய் கட்டுப்பாடு

  • தீவிர நோய் பரவலின் போது, விரைவாக அறுவடை செய்து, நோய் தாக்கமுற்ற தாவர பாகங்களை அகற்றி எரித்தல்
  • செய்கைக்கு முறையான போசணை வழங்கல்
  • தேவையற்ற நைதரசன் பசளை பிரயோகத்தை தவிர்த்தல்
  • பயிர் சுழற்சியை பின்பற்றல்
  • மீள்நடுகையின் போது ஆரோக்கியமான நடுகை பொருள் பாவனை

வணிக பயிர்களுக்கு பங்கசு நாசினி பயன்பாடு

  • ஒவ்வொரு அறுவடையின் பின்னரும் பரிந்துரைக்கப்பட்ட N மற்றும் K பசளைகளை பிரயோகித்தல், பின் முளைக்கும் போது பரிந்துரையின் கீழ் பங்கசு நாசினியை பிரயோகித்தல்
    • Mancozeb 80% WP – 16 லீற்றர் நீர் தாங்கிக்கு 32g
    • chlorothalonil 75% WP -16 லீற்றர் நீர் தாங்கிக்கு 20g  
    • chlorothalonil 500g / 15c – 16 லீற்றர் நீர் தாங்கிக்கு 30ml

7 தொடக்கம் 10 நாட்களில் மேற்குறிப்பிட்ட பங்கசு நாசினிகளை மீண்டும் பிரயோகிக்கவும்

குறிப்பு – தொடர்ச்சியாக ஒரே பங்கசு நாசினியை பயன்படுத்துவதால் பங்கசு அதற்கான எதிர்ப்பை உருவாக்கலாம். முடிந்தளவு பங்கசு நாசினியை மாற்றுவது அவசியம். அறுவடை செய்ய 2 வாரங்களுக்கு முன் பங்கசு நாசினி பிரயோகத்தை நிறுத்த வேண்டும். வீட்டுத் தோட்டம் மற்றும் சேதன செய்கைகளில் திரவ உட்புகுத்தலை பயன்படுத்தி  Trichoderma asperellum மூலம் இலைபுள்ளி நோயை கட்டுப்படுத்தலாம்.

வீட்டுத் தோட்ட செய்கை மற்றும் சேதன செய்கையில்

வீட்டுத் தோட்ட செய்கை மற்றும் சேதன பண்ணைச் செய்கையில் இலை புள்ளியை கட்டுப்படுத்த திரவ உட்புகுத்தலை பயன்படுத்தலாம்.

  • நடுகைப் பொரு சிகிச்சை மற்றும் நடுகை- Trichoderma asperellumல் ( திரவ உள்ளீடு 100ml 10 லீற்றர் நீரில்) 10 நிமிடம் அமிழ்த்திய பின் நடுதல்
  • நடுகை செய்து ஒவ்வொரு வாரத்தின் பின்னும் Trichoderma asperellum கலவையை தாவரம் மற்றும் மண் முழுமையாக நனைவும் வகையில் தெளித்தல். (அறுவடைக்கு முந்திய 7 நாள் காலம்)

குறிப்பு – Trichoderma பயன்படுத்திய நிலத்தில் பங்கசு நாசினியை தெளிக்க வேண்டாம்.

  •  

நோய் காரணி – இது Uromyces sp இனால் தோற்றுவிக்கப்படுகிறது

நோய் பரவல் – இந் நோயானது காற்று மற்றும் நடுகை பொருட்களினால் பரவல் அடைகின்றது

நோய் அறிகுறிகள் – இலைகளில் கீழ் பரப்பில் துரு புள்ளிகள் தென்படும் இலைகளும் தண்டும் பாதிக்கப்பட்டு தண்டு உடையும்

துரு நோய் கட்டுப்பாடு

  • நோய் தீவிரமாக பரவடையும் போது, உடனடியாக அறுவடை செய்து, பாதிப்புற்ற தாவர பாகங்களை அகற்றி எரித்தல்
  • செய்கைக்கு முறையான போசணையை  வழங்கல்
  • தேவையற்ற நைதரசன் பசளை பிரயோகத்தை தவிர்த்தல்
  • பயிர் சுழற்சியை கடைபிடித்தல்
  • மீள் நடுகையின் போது ஆரோக்கியமான நடுகை பொருள் பாவணை

வணிகப் பயிர்களுக்கு பங்கசு நாசினி பிரயோகித்தல்

  • ஒவ்வொரு அறுவடையின் பின்னும் பரிந்துரையின் படி N மற்றும் K பசளைகளை இடல். முளைக்கும் போது பரிந்துரையின் கீழ் பங்கசு நாசினியை தெளித்தல்.
    • Mancozeb 80% WP – 16 லீற்றர் நீர் தாங்கிக்கு 32g
    • chlorothalonil 75% WP – 16 லீற்றர் நீர் தாங்கிக்கு 20g
    • chlorothalonil 500g / 15c – 16 லீற்றர் நீர் தாங்கிக்கு 30 ml

மேற்குறிப்பிட்ட பங்கசு நாசினியை 7-10 நாட்களில் மீண்டும் தெளிக்கவும்

குறிப்பு – தொடர்ச்சியான ஒரே பங்கசு நாசினி பயன்பாட்டால் பங்கசிற்கான எதிர்ப்பு தோற்றுவிக்கப்படலாம். ஆகையால், பங்கசுநாசினி தெளிக்கும் போது, முடிந்தவரை பங்கசு நாசினியை மாற்றுவது அவசியமாகும். அறுவடை செய்ய 2 வாரங்களுக்கு முன் பங்கசு நாசினி இடுவதை தவிர்க்க வேண்டும்.

வீட்டுத் தோட்ட செய்கை மற்றும் சேதன செய்கையில்

திரவ உட்புகுத்தலை பயன்படுத்தி Trichoderma asperellum மூலம் இலை புள்ளி நோயை வீட்டுத் தோட்ட செய்கை மற்றும் சேதன செய்கையில் கட்டுப்படுத்தலாம்

  • நடுகைப் பொருள் சிகிச்சை மற்றும் நடுகை- Trichoderma asperellumல் (திரவ உட்புகுத்தல் 100 ml 10 லீற்றர் நீர்தாங்கியில்) 10 நிமிடம் அமிழ்த்திய பின் நடுதல்.
  • நடுகை செய்த பின் ஒவ்வொரு வாரமும் Trichoderma asperellum கரைசலை தாவரம் மற்றும் மண் முழுமையாக நனையுமாறு தெளித்தல் (அறுவடைக்கு முந்தைய 7 நாள் காலம்)

குறிப்பு – Trichoderma பயன்படுத்திய நிலத்தில் பங்கசு நாசினியை விசிறக்கூடாது.

நோய் காரணி – இது Sclerotium இனால் தோற்றுவிக்கப்படுகிறது. இவை மண்ணில் வாழ்பவை

நோய் பரவல் – பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் மண்ணினால் பரவும்

நோய் அறிகுறிகள்

செய்கை நிலத்தின் சில இடங்களில் வல்லாரை வேர் மற்றும் தண்டு அழுகலடையும். இலைகள் மஞ்சளாகி தாவரம் காய்ந்து பின் இறக்கும். தாவர அடியில் வெள்ளை பூஞ்சை வலையமைப்பை அவதானிக்கலாம்.

நோய் காரணி – மண்ணில் வாழும் Ralstonia solanacearum எனும் பற்றீரியாவினால் ஏற்படுகிறது

நோய் பரவல் – இந்நோயானது பாதிப்புற்ற தாவரங்கள் மண் மற்றும் பாசன நீர் மூலம் பரவல் அடைகின்றது

நோய் அறிகுறிகள் – பாதிப்புற்ற தாவர இலைகள் கபிலநிறமாகி பின் அழுகலடைந்து பழங்கள் இறக்கும். பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடியை வெட்டி நீர் நிறைந்த பாத்திரத்தில் இடும் ​போது வெள்ளைப் புகை போன்று வெட்டப்பட்ட பரப்பில் இருந்து வெளியேறுவதன் மூலம் பற்றீரியாவை அறியலாம்.

நோய் கட்டுப்பாடு

  • இரசாயன சிகிச்சை இல்லை
  • உடனடியாக நோயுற்ற தாவரத்தை களத்தில் இருந்து மண்ணுடன் அகற்ற வேண்டும்.
  • வயல் நிலங்களில், நோயுற்ற வரிகளுடாக ஆரோக்கியமான தாவரங்கள் கொண்ட வரிகளுக்கு நீரை திருப்ப வேண்டாம்.
  • களத்தின் நீர்பாசன மேம்பாடு
  • சேதன பசளை பயன்பாடு (குறிப்பாக கோழியெரு)
  • இந்நோயை பயிர் சுழற்சி மூலம் கட்டுப்படுத்தலாம். (வற்றாளை, கன்குங் அல்லது பொன்னாங்கன்னி)
  • மீள் நடுகையின் போது நோய் பாதிப்பற்ற நடுகைப் பொருள் பயன்பாடு

நோய் பரவல் – இந்நோயை அழுக்கணவான், சாறு மற்றும் வெட்டுத்துண்டுகளால் பரவலடைகின்றது

நோய் அறிகுறிகள் – இலைகளில் மஞ்சள், பச்சை புள்ளிகள் தோன்றும் இளம் இலைகள் ஒழுங்கற்ற வடிவமாகும். இலைகள் சிறிதாகி மஞ்சளாகும் இலைகளில் கபிலப் புள்ளிகள் தோன்றும் இலை விளிம்புகள் மற்றும் தண்டுகள் ஊதா நிறமாகும். தாவரம் குறள்நிலை அடைந்து மூடுபடை குறையும் இறுதியில் தாவரம் இறக்கும்

நோய் கட்டுப்பாடு

  • நோயுற்ற தாவரங்களை கண்டவுடன் அவற்றை அகற்றி எரிக்கவும்
  • செய்கைக்கு போதிய போசணையை வழங்கல்
  • தேவையற்ற நைதரசன் பசளை இடலை தவிர்த்தல்
  • பயிர் சுழற்சியை கடைபிடித்தல்
  • மீள் நடுகைக்கு ஆரோக்கியமான நடுகை பொருட்களை பயன்படுத்தல்

அறுவடை

முதல் அறுவடையானது நடுகை செய்த நாளில் இருந்து 100 நாட்களில் பெறப்படும். அறுவடை முறைக்கமைய அறுவடை எண்ணிக்கை மாறுபடும்.

விளைச்சல்

100m2 (1/4ac) களத்திலிருந்து 1000 – 1250kg வல்லாரை அறுவடையை பெறலாம். தாவரத்தின் அறுவடையானது 2-3 வருடங்களுக்கு தொடர முடியும்.