விவசாயத் திணைக்களத்தின் கள நாளை நடத்துதல் 2023.07.26
பொலன்னறுவை விதை உற்பத்தி பண்ணையின் கள நாள்

நோக்கம்

இந்த கள நாள் பின்வரும் 3 நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடாத்தப்படுகிறது.

  1. பொலன்னறுவை பண்ணையில் பெறப்பட்ட கள மற்றும் முகாமைத்துவ அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்தல்.
  2. அத்திவார விதை உற்பத்தி தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்
  3. உள்ளூர் விவசாயத்திற்கு பொலன்னறுவை விதை உற்பத்திப் பண்ணையின் பங்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்.

பின்வரும் விடயங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டல்.

  1. தாவர நாற்றுமேடை – தாவர ஒட்டு செய்தல் ,மண் கலவைகளை தயாரித்தல், தாவர பராமரிப்பு போன்ற விடயங்கள்.
  2. மறுவயற் பயிர்ச்செய்கை – மறுவயற்பயிர் வர்க்கங்கள், வர்க்கங்களின் பண்புகள் மற்றும் விதை உற்பத்தியில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய விடயங்களை முன்வைத்தல்.
  3. மரக்கறிச்செய்கை – வெண்டிக்காய், வெள்ளரிக்காய், கத்தரி விதை உற்பத்தி தொடர்பான விடயங்களை முன்வைத்தல்
  4. சேதனப்பசளை உற்பத்தி – சேதனப்பசளை உற்பத்தி முறைகள் தொடர்பான செயன்முறை விளக்கம், பயன்படுத்தப்படும் உபகரணங்களை அறிமுகப்படுத்தல்
  5. நெற்செய்கை – பொலன்னறுவை விதை உற்பத்தி பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அத்திவார வர்க்கங்கள் -18 மற்றும் பதிவு செய்யப்பட்ட வர்க்கங்கள் 16 தொடர்பான விடயங்களை முன்
    வைத்தல்.
  6. இயந்திரவியல் பிரிவு – பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கலப்பைகள், உழவு இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், களையகற்றும்
    உபகரணங்கள், விதை நெல் சேகரிப்பு இயந்திரம் போன்ற உபகரணங்களை காட்சிப்படுத்தல்.

பங்கேற்பு

  • பொலன்னறுவை மாவட்டத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் விவசாய விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள்
  • விதை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள்
  • விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதான காரியாலயம், பிரதேச காரியாலயம் மற்றும் பண்ணைகளின் அதிகாரிகள்.
  • விவசாயத்துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் பிரிவின் அதிகாரிகள்.
  • விவசாயத் திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளின் அதிகாரிகள்.